சிறார் களம்,
குழந்தைகளுக்கான கோடை ஒன்றுகூடல்
- காகித பொம்மை
- பட்டாம்பூச்சியோடு பறப்போம்
- குப்பையிலிருந்து கலை
- கூட்டாஞ்சோறு - சிலம்பம்
- கதைக்களம்
- மலை ஏறுதல்
- நிழல் பாவைக்கூத்து
காலை 8 மணி முதல்
25 மே 2019 சனிக்கிழமை
அகத்தி தோட்டம்.
"மலைக்கு எவ்வளவு தடவை வேணும்னாலும் காசு கொடுக்காம போலாமா அண்ணா ?"
சிறார் களத்தில் பங்கெடுத்த ஏழாம் வகுப்பு படிக்கும் ஷாலினியிடம் இருந்து வந்த கேள்வி.
இயற்கையை மக்களிடமிருந்தும், எதிர்காலத் தலைமுறை இடமிருந்து குறிப்பாக குழந்தைகளிடம் இருந்தும் இப்படி ஒட்டுமொத்தமாக பிரித்தெடுத்த இந்த சமூகத்தை என்னவென்று சொல்வது. ஒருவிதமான பயம், பதட்டம், கோபம், ஆதங்கம் என்று எல்லாம் கலந்த உணர்வை இந்த கேள்வி என்னுள் ஏற்படுத்தி உள்ளது. எல்லாவற்றையும் பணமாக பார்க்கும் மனோபாவத்தை விதைத்த இந்த நுகர்வு கலாச்சாரத்தில் இருந்து குழந்தைகளை விடுவிப்பதே இவர்களுக்கு நாம் செய்யும் தலையாய கடமையாகும். குழந்தைகளை இயற்கைக்கு நெருக்கமாக கூட்டிச் செல்வோம்… அதை மதிக்கவும் புரிந்து கொள்ளவும் பாதுகாக்கவும் எடுத்துச் சொல்லுவோம். எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த பழகுவோம்… இயற்கையின் அன்பால் இணைவோம் !


Comments
Post a Comment