அகத்தீ-ஒன்றுகூடுகை அகத்தீ அறக்கட்டளையாக பதிவு செய்த பின் , ஒரு ஞாயிறு காலை அக்குழு கூடி அகத்தீயின் செயல்பாடுகள் , அறக்கட்டளையாக பதிவு செய்ய வேண்டிய தேவை , எதிர்கால செயல்பாடுகள் என கலந்துரையாடியது . கிழக்கு தாம்பரத்தில் தோட்டத்துடன் கூடிய ஒரு வீடே அகத்தீ உருவாக காரணம் . அவ்வீடு , பல ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் மாற்று சிந்தனையுடைய இளைஞர்கள் சந்திப்பதற்கும் , தங்குவதற்கும் , விவாதிப்பதற்கும் ஒரு தளமாக அமைந்தது . சமூகம் , பண்பாடு , இயற்கை விவசாயம் , சுற்று சூழல் , தற்சார்பு வாழ்வியல் , அரசியல், சிறார் களம் என பல்வேறு தளங்களிலும் அகத்தீ செயல்படுகிறது . காலநிலை மாற்றத்தாலும் , சமூக - அரசியல் சிக்கல்களாலும் நெருக்கடிக்குள்ளாகும் நம் வாழ்வை அவதானிக்கவும் , மாற்றவும் , முன்னேற்றவும் அகத்தீ போன்ற அமைப்புகளின் தேவையுள்ளது . சிறுவர்கள் , இளைஞர்கள் , பெண்கள் உள்ளிட்ட சமூகத்தை பல நிலைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்றத்தை விதைக்கவும் , செயல்திறனை ஊக்குவிக்கவும் அ...