அகத் தீ - வானகம் பயணம் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவிடம் கடந்த 10 ஆண்டுகளில் எங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் புத்தாண்டு அன்று வானகத்தில் தான் இருந்திருப்பர். இந்த முறை வானகம் பயணம் திட்டமிடும்போதே கூடுதல் உற்சாகம் தொற்றிக்கொண்டு விட்டது. "நம் கூட்டு எதிர்காலத்திற்கான சிறார்கள்" என்ற தலைப்பில் கடந்த நவம்பர் டிசம்பரில் நடந்த பயிற்சி வகுப்புகளில் பங்கெடுத்த அகத்தீ மொட்டுக்கள் வானகம் பயணத்தில் பங்கெடுக்க காட்டிய ஆர்வம் திக்கு முக்காட செய்தது. அதற்கு ஏற்றார் போல் 2 நாள் பயணமாக திட்டமிட்டோம். முதல் நாள் உலகத்தில் இரண்டாவது பெரிய அலையாத்தி காடான பிச்சாவரத்தில் படகு சவாரி சென்றோம். போகும் வழியில் வள்ளலார் என்று அழைக்கப்பட்ட ராமலிங்க அடிகளாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் இருக்கும் வடலூருக்கு சென்று பார்த்தோம். பசியாறுவதற்கு 157 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஏற்றி வைத்த ஆணையா அடுப்பையும் கண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வானகத்திற்கு எப்பொழுது சென்றாலும் தாய் நிலம் போன்ற உணர்வை ஏற்படுத்துகின...