அகத்தீ பொம்மலாட்டம் "அந்த காலத்துல மக்கள் எல்லாருக்கும் மாயசக்தி இருந்தது....அந்த ரகசியம் அங்கு இருக்க பழைய கிணற்றுள்ள இருக்கு"னு பாட்டி சொல்ல "மாய சக்தியா.....?" என்று கோமாளி ஆச்சரியப்பட "அது என்னனா..... ? அவங்க எல்லாரும் ஒற்றுமையா இருந்து, காடு, மலை, ஆறு, என்று எல்லாவற்றையும் பத்திரமா பாதுகாத்து மகிழ்ச்சியா இருக்கும்பொழுது இருந்த மாய சக்தி அது....." என்று கிணற்றுக்குள் இருந்து வந்த முதலை சொல்ல ஆரம்பித்தது. இப்படியாக "கோமாளி" நாடகம் பயணிக்க, சிறார்களின் வெடி சிரிப்பு, கேள்விகள், கிண்டல்களுக்கு நடுவே குட்டி மழையுடன் நிறைவடைந்தது. மரம், கிளை, பழம் விளையாட்டில் தொடங்கி, ஏழு குழுவாக குழந்தைகள் பிரிந்து அவர்களுக்குள் கதைகள் பேசி, காதாபத்திரங்களை வரைந்து,வெட்டி, ஒட்டி, விரல் பொம்மைகளாக மாற்றி, நடித்து, கதைத்து, விளையாடி, மகிழ்ந்தார்கள். எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள், நாற்பதற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் வந்திருந்தார்கள். குழந்தைகளுக்கு சிறுதானிய உருண்டையும், பெற்றோர்களிடம் விஞ்ஞானிகள் செர் சி.வி.ராமன் மற்றும் டார்வின் புத்தகங்களை கொடுத்து மகிழ்ந்தோ...