தமிழும் இயற்கையும் நிகழ்வும் அதன் தொடர்ச்சியும் ..... மொத்தம் 17 பள்ளிக்கூடங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்று பிரிவுகளாக 11 போட்டிகளில் பங்கெடுத்தனர். 65 மாணவர்கள் பரிசு பெற்றார்கள். மாணவர்களுக்கான இந்த திறனறிதல் போட்டியை திட்டமிடும் போதே இது தொடர் நிகழ்வுகளுக்கான தொடக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இதன் காரணமாக மட்டுமே பரிசுகளை அதற்க்கு ஏற்றார் போல் திட்டமிட்டோம். ஒரு தலைமை ஆசிரியரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் " நீங்கள் அறிவித்திருக்கும் பரிசு சிறப்பாக ஒன்றுமில்லை ஆனால் ஏதோ வித்தியாசமா இருக்கு" என்றார். ஆம் எங்களுக்கு பதக்கங்களும் கேடயங்களும் வழங்குவதில் விருப்பமும் இல்லை உடன்பாடும் இல்லை. அதற்கு மாற்றாக திட்டமிடும் போது உதித்த சிந்தனைகளே இவை • அகத்தீக்கு நன்கு அறிமுகமான தாம்பரத்தை சுற்றி உள்ள இயற்கை விளைபொருள் அங்காடிகள் மூலமாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அட்டைகளை வழங்கினோம். இதன் மூலம் நேரடியாக கடையில் சென்று மாணவர்கள் பரிசு பொருட்களை பெறும் போது ஏற்படும் உரையாடல்களையும் மிக முக்கியமாக கருதினோம். பரிசு அட்டைகளையும் ச...