Skip to main content

Posts

Showing posts from November, 2023

அகத்தீ - சிறுவர்களுக்கான நூல் அறிமுகம் நிகழ்வு

  அகத்தீ சிறுவர்களுக்கான நூல் அறிமுகம் நிகழ்வு நேற்று சிட்லபாக்கம் ஏரிக்கரையில் மழை காரணமாக ரத்து செய்த போது "மாமா நான் வந்துட்டேன் நீங்க எங்க இருக்கீங்க ? மழை இங்க பெருசா இல்ல" என்று நிஷாந்த் சொல்ல... இன்னும் சிலர் நிகழ்வுக்காக வந்திருந்தது தெரிய வந்தது.... என்ன ஆச்சரியம், மகிழ்ச்சி. தமிழ் ஆசிரியர் தோழர் வெஸ்லி அவர்கள் எழுதிய சிறுவர் கவிதையை நிஷாந்த் எங்கள் முன்பு வாசித்தான். "குயில் தான் ஒரு குயில் என்று அறியும் போது குக்கூ என்றது" இயற்கையிடமிருந்து பாடம் கற்கும் செய்தியாக இருந்தது இந்த கவிதை. சிட்லபாக்கம் ஏரியில் மரம் நடுவதை சிறப்பான பணியாக செய்து கொண்டிருக்கும் நிழல் அமைப்புக்கு தோழர் வெஸ்லி எழுதிய தாம்பரம் வரலாறு நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. - அகத்தீ

அகத்தீ குமுகம்

  அகத்தீ குமுகம் நாம் ஒவ்வொருவரும் இணைந்து ஒரு குமுகமாக செயல்படுவதே நுகர்வு வாழ்க்கை முறைக்கு மாற்றாக அன்பின் மீது ஒரு சமூகத்தை கட்டமைக்க நமக்கான பலத்தை கொடுக்கும். குமுகமாக இணைவோம். 18 & 19 நவம்பர் 2023

சிறார் களம் - 13/11/2023

அகத் தீ குழந்தைகளுக்காக நாம் ஒரு முழு நாள் செலவிட வேண்டும் என்பதை பற்றி காஞ்சனா தோழர் , பாரதி தோழர், ரொம்ப நாட்களாக பேசி கொண்டிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக பத்து வயதுக்கு மேற்பட்ட 15க்கும் கூடுதலான சிறுவர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வை கடந்த திங்களன்று ஏற்பாடு செய்தோம்.   பாரதி தோழர், காஞ்சனா தோழர், அசோக் தோழர், ராம் தோழர், பாவணன் தோழர் இவர்களின் ஒரு வார முயற்சியின் மூலமாக ஒவ்வொருவரின் ஆலோசனைகளின் படி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் புதுவிதமான விளையாட்டுகள், கதை சொல்லல் , கூட்டு செயல்பாடுகள் என்று பல நடத்தினோம்.   முதலில் தனித்தனி குழுவாக பிரித்து அவர்களைப் பற்றின அறிமுகத்தை நடத்தினோம். அவர்கள் குழுவுக்கு ஒரு பெயரை தேர்ந்தெடுக்க சொல்லி அதற்கான காரணத்தை விளக்க சொன்னோம். ஒரு தலைப்பு எடுத்து தொடர் கதை சொல்லுதல் அதன் பிறகு மதிய உணவு, விளையாட்டுகள் standing kokko, pick the cup, முடித்தவுடன் கணக்கும் இனிக்கும் அமர்வு இருந்தது. ஒவ்வொரு குழுவும் கடைசியாக ஒரு சிறப்பான நாடகத்தை இயற்றினர்.   நேற்றைய நிகழ்விற்கு பிறகு சிறுவர்களுக்கான தொடர் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தை பசங...

அகத்தீ - அருள் இல்லம் குழந்தைகளுடன் தீப ஒளி திருநாள் கொண்டாட்டம்

  அகத் தீ அருள் இல்லம் குழந்தைகளுடன் தீப ஒளி திருநாள் கொண்டாட்டம் 12/11/2023 அன்று காலை 9:00 மணி அளவில் அருள் இல்ல உறவுகளோடு கொண்டாடினோம். கடந்த 13 வருடமாக தோழர் கணேஷ் அவர்களின் தனிப்பெரும் முயற்சியால் நம்மோடு பல அறிந்த நண்பர்கள் மற்றும் முகம் அறியா நண்பர்கள் இணைந்து குழந்தைகளுக்கான புத்தாடை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அகத்தீ - நாம் ஏன் ஒரு சமூகமாக இயங்க வேண்டும் ?

அகத் தீ   நாம் ஏன் ஒரு சமூகமாக இயங்க வேண்டும் ? வணக்கம் தோழர்களே கடந்த நவம்பர் 5-ம் தேதி நடைபெற்ற கூடுகையை பற்றி எனது சிறிய கண்ணோட்டம். முதலில் பாரதி, காஞ்சனா, கோமதி, ரேஷ்மா மற்றும் அசோக் தோழர்களுக்கு என் மனமர்ந்த நன்றிகளை தெவித்துக் கொள்கிறேன் . இத்தகைய ஒருநாள் கூடுகையை சாத்திப்படுத்துவதே சிரமம். அதையும் எந்த தொய்வும் இல்லாமல் சிறப்பாக நடத்திச் சென்றதற்காக எனது பாராட்டுகள். பல நாட்களுக்கும் பிறகு அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நேரம் கடந்து வந்தாலும் சிரித்த முகங்களுடன் அனைவரும் வரவேற்பதில் தொடங்கி வர்ஷாவின் பாடல் மற்றும் முதலாவதாக தொடங்கிய குழு செயல்பாடு (TO WORKSHOP ) அனைவரின் கூச்சத்தன்மையை விடுவித்து குழுவினருடன் ஒன்றிணைய வைத்தது. விளையாட்டு என்றுமே உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரும். சமார்த்தியமாக பாரதி தோழர் முதல் செயல்பாடாக அதை செய்தார். பிறகு குழுக்களாக பிரிந்து ஒருவரைப் பற்றி மற்றொருவர் அவர்களின் அறம் சார்ந்த பண்புகளை பேசியது ஆரோக்யமான உரையாடலாக இருந்தது. சிரித்து மகிழ்ந்து அனைவரின் கதைகளையும் கேட்டதும், குழந்தைகளின் கனவு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என...