சூழலியல் பயணம் 21 மே 2022, சனிகிழமை உழவி பண்ணை, விக்கிரவாண்டி நகர, நரக வாழ்வியலில் இருந்து விடுபட்டு இயற்கைக்கு திரும்பும் பாதைக்கு திரும்ப விரும்பும் நண்பர்களுடனான இது போன்ற பயணங்கள் கடந்த எழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடத்திக் கொண்டு வருகிறோம். தொலைத்த மரபு அறிவையும் நஞ்சியில்லாத விவசாயமும், சத்தான உணவின் முக்கியதுவத்தை பற்றியும் மக்களின் தேடல் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. ஆரோக்கியமில்லாத தலைமுறையும், பணம் பன்னுவதையே குறியாய் வைத்துள்ள நவீன மருத்துவமும் மக்களிடம் நம்பிக்கையை இழக்க வைத்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். விக்கிரவாண்டி அனுராதா, நடராசன் தம்பதியர்கள் தன் ஒரே மகனுக்கு நஞ்சியில்லாத உணவை கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்காக லட்ச ரூபாய் தருகிற வருமானத்திலிருந்து தங்களை விடுவித்து கொண்டே விவசாயத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக மாதிரி ஒருங்கிணைந்த 'உழவி'காய்கறி பண்ணையையும் 'ஞாயிறு இயற்கை உழவர் குழுவையும்' உருவாக்கினார்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது இதை வெற்றிகரமாக செயல்படுத்தி கொண்டிருக்கின்றனர். இவர்களை உழவி பண்ணையிலேயே சந்தித்தது மிகப் பெ...