Skip to main content

Posts

Showing posts from January, 2025

தகையில் தளம் வாசிப்பு வட்டம்

 தகையில்  தளம் வாசிப்பு வட்டம் பொன் சிவா 11வது படிக்கும் பள்ளி மாணவன் " 'ரஸ்கின் பாண்ட்' நூல்களை படித்துக் கொண்டிருந்த எனக்கு 9வது விடுமுறையின் போது வீட்டில் இருந்த லியோ டால்ஸ்டாயின் சிறுகதை தொகுப்பு என் கண்ணில் பட்டது. ஒவ்வொரு கதையாக படிக்கும் போது ஒரு சுவையான மிட்டாயை சாப்பிட்டது போலவும் இருந்து சாப்பிடாதது போலவும் இருந்தது மேலும் சாப்பிட வேண்டும் என்றும் இருந்தது. மிகவும் கலவையான ஒரு அனுபவத்தை அந்த நூல் கொடுத்தது. இதில் தொடங்கிய என்னுடைய வாசிப்பு பயணம் அரசியல், தத்துவம், வரலாறு என்று ஆழமான நூல்களை தேடி தேடி படிக்க தூண்டுகோலாக இருந்தது. ஆங்கிலத்தில் வாசிப்பதை விட தமிழ் என் மனதுக்கு நெருக்கமாக இருந்ததை உணர்ந்தேன். இதை பார்த்த என் அப்பா எனக்கு புத்தகங்களை மட்டும் வாசிப்பதற்கான கிண்டில் கருவியை வாங்கி கொடுத்தார். இதன் காரணமாக என் வாசிப்பு விரிவடைந்தது. விடுமுறை நாட்களில் பல நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட நூல்களை ஓரிரு நாட்களில் படிக்க எனக்கு உதவியாக இருந்தது என் ஆயா தான். அவர் சமைத்து போட சாப்பிடுவதும் படிப்புதுமாக மட்டுமே என் விடுமுறை நாட்கள் பயனுள்ளதாக சென்றது. இதன் கார...

அகத்தீ - பெரும் கனவின் சிறு தொடக்கம்

  அகத் தீ - பெரும் கனவின் சிறு தொடக்கம்.. தகை அகத்தீ முன்னெடுப்பு நகர வாழ்க்கையின் பின்னணியில் நஞ்யில்லாத உணவு, சுவரில்லா கல்வி, மருந்தில்லா மருத்துவம், ரசாயனம் இல்லாத வீடு, அறம் சார்ந்த வாழ்வியல், ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் இல்லாத சமூகம் என்ற தேடலில் தொடர்ச்சியாக இணைந்து பயணப்பட்டதை ஒட்டி கூடுவதற்கும் உரையாடுவதற்கும் அறிவு பரிமாற்றத்திற்கும், அன்பை பகிர்வதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு பொதுவான இடம் என்பது அத்தியாவசியமானதாக மாறியது. நமக்கான ஒரு இடம் என்று அமையும் போது ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான வேலைகள், ஆற்றல் மிகுந்த புதிய மனிதர்களின் அறிமுகம், நம்பிக்கை அளிக்கும் செயல்கள் போன்றவை இடத்திற்கான தேவையை மென்மேலும் அதிகப்படுத்தியது. அதன் நீட்சியே 'தகை' இந்த ஆண்டு தை 1 அன்று எளிமையாக தொடங்கியதிலிருந்து கடந்த மாதம் நிறைவான சில நிகழ்வுகளை சாத்தியப்படுத்தியதுடன், நமக்கான ஒரு வெளியின் தேவையை உயிர்ப்பாக்கியது தகை. மாலை நேரங்களில் ஓவிய வகுப்பு தொடங்கியாகிவிட்டது... அடுத்தடுத்து நிகழ்வுகளை இங்கு நடத்துவதற்கு நட்பு வட்டங்களின் அழைப்பும் வரத் தொடங்கி விட்டது... *பரதநாட்டியம் வகுப்புகள் ...