பசுமை நடை மற்றுமொரு பசுமைநடை பெருங்குளத்தூர் மலைக்கு. சின்ன ஏமாற்றம் ,சில தடைகள் இருந்ததால் முழுவதுமாக ஏற முடியவில்லை. எனினும் புதிய நண்பர்களின் அறிமுகம், சிறிது தூரம் நடந்தாலும் காட்டுக்குள் நடந்து செல்வது போன்ற உணர்வு. விதவிதமான பறவைகளின் சப்தம், மயிலையும், காட்டுப் பன்றியும் மிக அருகாமையில் கண்டது, நமக்கு பக்கத்திலேயே ரசிக்கக்கூடிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது என்பதை இந்தப் பசுமை நடை உணர்த்தியது. நன்றி தோழர்களே. இந்த நடையை இன்னும் அழகாக்கிய குழந்தைகளுக்கு நன்றி . கடந்த சனிகிழமை சென்று வந்ததையொட்டி பங்கெடுத்த ஒருவரின் அனுபவ பகிர்வு. பாரதி கண்ணன் தாம்பரம் மக்கள் குழு