Skip to main content

Posts

Showing posts from August, 2025

வீட்டுத் தோட்டப் பயிற்சி

அகத் தீ-- வீட்டுத் தோட்ட பயிற்சி 30/08/25 வீட்டு தோட்டத்தை அமைப்பதில் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கான பயிற்சியாக இது இருந்தது. விதை தேர்ந்தெடுப்பு ஊடுபயிர் மூடாக்கு உயிர் உரம் பூச்சிக் கட்டுப்பாடு நஞ்சில்லா உணவின் முக்கியத்துவம் என்பதை பற்றியான அறிமுக நிகழ்வாக இருந்தது. பயிற்றுனர் நீலா கிருஷ்ணன் அவர்களின் முன்னெடுப்பான வானகா சார்பாக விதைகள்,வெண்டைக்காய் காராமணி மற்றும் அவர்களே உற்பத்தி செய்து தயார் செய்த மதிப்பு கூட்டின பொருட்கள் விற்பனைக்கு இருந்தது. இதனுடன் தகை சமூக கூடத்தில் மக்கு உரம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதையும் விளக்கினோம். பங்கெடுத்த அனைவரும் ஆர்வத்துடனும் முனைப்புடனும் பயிற்சி வகுப்பில் ஈடுபட்டது நிறைவாக இருந்தது. தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைப் பற்றி தெரிந்துகொள்ள கீழ்காணும் அகத்தீ குழுவில் இணையவும் Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KxpUG00DVv7AxiTt7f7tH8?mode=ac_t

நெகிழி பூதம் விழிப்புணர்வு நிகழ்வு

 'நெகிழி பூதம்'  இப்பூவுலக்கில் நெகிழி ஏற்படுத்தி உள்ள பாதிப்புகளை விளக்கி ஓவியம் வரைவதற்கான விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்தோம். ஜெனிவாவில் ஆகஸ்ட் 5 முதல் 14ஆம் தேதி வரை உலகளாவிய நெகிழி ஒப்பந்தத்திற்கான மாநாடு நடந்தது. அதில் நம் கூட்டு எதிர்காலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அங்கு நமக்காக பேசுகின்ற அனைவருக்கும் வலு சேர்க்க ஊர் கூடி ஓவியம் வரையும் முயற்சியாக இதை திட்டமிட்டோம். எப்போதும் போல் சிறுவர்கள் கணிசமாக பங்கெடுத்தனர். சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழுவில் இருந்து ஜெயஸ்ரீ அவர்கள் உலகளாவிய நெகிழி ஒப்பந்தத்தின் சாராம்சத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் சுருக்குமாக வந்திருந்த அனைவரிடமும் விளக்கினார். சிறுவர்கள் மிக ஆர்வமாக வரைய அமர்ந்திருந்த போது எதிர்பாராத மழை சற்று ஒரு ஏமாற்றத்தை எங்களுக்கு ஏற்படுத்தினாலும், அதன் பிறகு சிறுவர்களின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் விளக்குவதாக இருந்தது. அவர்கள் வரைந்த ஒவ்வொரு ஓவியமும் அடி ஆழ்மனதில் அவர்களுக்கு இருக்கும் நெகிழி பற்றியான புரிதலை எடுத்துரைப்பதாக அமைந்தது.  நெகிழி இல்லா உலகத்தை உருவாக்க முன் வருவோம். 10/08/25 ஞாயிற்றுக...

பள்ளி மாணவர்கள் - நாம் ஏன் வரலாறு படிக்க வேண்டும் ?

  அகத் தீ-- நாம் ஏன் வரலாறு படிக்க வேண்டும் ? பள்ளி மாணவர்கள் மத்தியில் வரலாறு ஓர் அறிமுகம் என்ற உரையாடலை அகத்தீ சார்பாக பங்கு எடுத்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. மிகவும் சிறப்பாக பெருங்களத்தூர் அன்பு அகாடமி ஏற்பாடு செய்திருந்தனர். நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு மனதிற்கு நெருக்கமான ஒரு தலைப்பில் நிகழ்வு. மகிழ்ச்சி.