உறுதியாக நம்புங்கள் "மாறுதலுக்கான வாசல் எக்காலத்துக்கும் திறந்தே இருக்கிறது. அது நம்மிலிருந்து முதல் அடியை எடுத்து வைத்த கணம் அதனை அடைவதற்கான அனைத்து சக்திகளையும் பிரபஞ்சம் நமக்காக உருவாக்கிக் கொண்டே இருக்கும் உறுதியாக நம்புங்கள்." - வாழ்வியல் அறிஞர் ஐயா நம்மாழ்வார். "உங்கள் அகத்தீ குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அர்ப்பணிப்போடு பம்பரமாய் சுற்றி செய்த வேலை எங்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. உங்கள் எல்லோரையும் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி, வெறும் வாழ்த்துக்கள் என்று சொல்லி செல்வது பொருத்தமாக இருக்காது. வரும் காலங்களில் உங்களோடு எப்படி இணைந்து பயணிக்கலாம் ? என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படுகிறது ?" என்று நிகழ்வு நடந்து முடிந்த போது பங்கெடுத்த ஒரு பள்ளியின் தமிழ் ஆசிரியர் நம்மிடம் வந்து கூறியது நம் நோக்கம் நிறைவேறியதின் பெரும் நிறைவை கொடுத்தது. இது நமக்கு கூடுதல் பொறுப்புணர்ச்சியோடு, செயல்படுவதற்க்கான நம்பிக்கையாக இருந்தது. கடந்த சனவரி 25 நடத்தப்பட்ட தமிழும் இயற்கையும் மாணவர்களுக்கான திறனறிதல் போட்டி நடத்துவதற்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பாக தமுஎகச நடத்திய ...