Skip to main content

Posts

Showing posts from June, 2025

ஓமியோபதி மருத்துவ முகாம்

 ஓமியோபதி மருத்துவ முகாம் "இப்போது தான் முதல் முறையாக ஓமியோபதி மருத்துவம் பற்றி கேள்வி படுகிறேன்" "ஓமியோபதி மருத்துவம் பற்றி கேள்வி பட்டது உண்டு, ஆனால் மருந்து எடுத்து கொண்டது இல்லை" என்று பங்கெடுத்த பலரும் இவ்வாறான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அலோபதி ஆங்கில மருத்துவம் தான் நாம் பரவலாக அறியப்பட்ட மருத்துவ முறை. ஆனால் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நமக்கு ஏற்படும் பல உடல் உபாதைகளை நம் பாரம்பரிய மற்றும் அலோபதி மருத்துவம் இல்லாத மருத்துவ முறை மூலமாக குணபடுத்த முடியும். அப்படிப்பட்ட ஒரு முயற்சியாக தான் ஓமியோபதி மருத்துவம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் இலவச மருத்துவ முகாம் கடந்த மாதம் (29 சூன் 2025) முதன் முறையாக நடத்தினோம். தாம்பரத்தைச் சேர்ந்த ஓமியோபதி மருத்துவர் அசோக் குமார் மற்றும் அவருடைய குழு சிறப்பாக மருத்துவ முகாமை கொண்டு சென்றனர். பங்கெடுத்த அனைவரும் பயன் பெற்றனர் என்பது சிறப்பம்சமாகும். அடுத்த முகாம் அறிவிக்கும் போது தகவல் பெற விரும்புவர்கள் கீழே உள்ள அகத்தீ வாட்சப் குழுவில் இணையலாம். அகத்தீ 9498488645

திரையிடலும் உரையாடலும்

  அகத் தீ -- திரையிடலும் உரையாடலும் ஒரு நல்ல திரைப்படம் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.... குழந்தைகளுடனான தலைமுறை இடைவேளியை அவர்களின் கனவுகளை அற்புதமாக விவரிக்கும் சிறந்த திரைகதை நல்ல திரைப்படங்களும் நல்ல மனிதர்களை உருவாக்கும் .... படம் பார்க்க வாங்க

அகத்தீ - மத்திய சித்த ஆய்வு நிறுவனம்

அகத் தீ -- மத்திய சித்த ஆய்வு நிறுவனம் மலையேற்றத்தில் யோகா பச்சைமலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு (19/07/25) நம் அகத்தீயுடன் இணைந்து தாம்பரம் சானடோரியதில் அமைந்துள்ள மத்திய சித்த ஆய்வு நிறுவனம் இயற்கை சூழலில் யோகாவை முன்னெடுத்தனர். 'வரலாற்று பார்வையில் சூழல் அறிவோம்' என்ற தலைப்பில் கல்வெட்டு ஆய்வாளர் கிழக்கு தாம்பரம் பகுதியைச் சார்ந்த ஜான்சன் வெஸ்லி அவர்களும், 'காலநிலை மாற்றமும் நாம் எதிர்கொள்ளும் சவால்களும்' என்ற தலைப்பில் அகத்தீ ஒருங்கிணைப்பாளர் பாரதி கண்ணன் அவர்களும் சிறப்பு கருத்தாளராக பங்கெடுத்தனர். ஏராளமான சித்த மருத்துவ மாணவர்கள் பங்கு எடுத்தது சிறப்பம்சமாகும். சித்தா ஆய்வு நிறுவன பொறுப்பாளர்கள், அகத்தீ சார்பாக முன்மொழிந்த பல யோசனைகளை வரவேற்று அதை சிறப்பாக செயல்படுத்தினர்‌. * மலையேற்றத்தில் விதைப்பந்து தூவுதல், * துணியிலான பதாகைகள், * மலையில் உள்ள நெகிழி குப்பைகளை அகற்றுதல், * காகித குவலைகளையும் தவிர்த்து எவர் சில்வர் குவளைகளை வாங்கி பயன்படுத்தியது, * 'வளம் ஆர்கானிக்' மூலமாக நஞ்சில்லாத இயற்கை உணவை ஏற்பாடு செய்தார்கள். * இந்த பரம்பரிய உணவு கு...

பயிலரங்கம் - தகவல் பெறும் உரிமைச் சட்டம்

  அகத்தீ சார்பில் வெற்றிகரமாக நடைபெற்ற தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பயிலரங்கம்! தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலமாக பத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை தொடர்புடைய அரசு அலுவலகங்களுக்கு எழுதி அனுப்பப்பட்டது. அகத்தீ சார்பில் ஜூன் 15, 2025 அன்று 'தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005' குறித்த ஒரு நாள் பயிலரங்கம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தப் பயிலரங்கில் கல்லூரி மாணவர்களும், அகத்தீ உறுப்பினர்களும் ஆர்வமுடன் பங்கேற்றுப் பயனடைந்தனர். நிகழ்வின் தொடக்கமாக, தோழர் பாரதி கண்ணன் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (RTI) அறிமுகம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். குறிப்பாக, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதில் RTI-இன் பங்களிப்பை எடுத்துரைத்தார். மேலும், கல்வி உரிமைச் சட்டம் (RTE) கொண்டு வந்ததால் அரசுப் பள்ளிகளில் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் விரிவாகப் பேசினார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வழக்கறிஞர் வழக்.ஆதன்(எ) சுரேந்தர் பாபு. அறி.இ.சட்ட.இ., அவர்கள், RTI சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த ஆழமான அமர்வை நடத்தினார். அரசு தகவல...

பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் ; குழந்தை வளர்ப்பில் சமநிலை

  அகத் தீ- பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் : குழந்தை வளர்ப்பில் சமநிலை கடந்த வாரம் சனிக்கிழமை ஜூன் 14 அன்று, அகத்தீ சார்பில் "குழந்தைகள் வளர்ப்பில் சமநிலை" என்ற தலைப்பில் நடந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டோம்.. தோழர் ஷைனி சாரா (குழந்தைகள் நல ஆலோசகர்) அவர்கள், மிகுந்த நிதானமாகவும், தற்கால வாழ்வியல் முறைகளுக்கு ஏற்றவாறும் குழந்தைகளை கையாள்வது எப்படி என்றும் எடுத்துரைத்தார்.. பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் குழந்தைகளோடு பேசவும் விளையாடவும் நேரத்தை பயன்படுத்துவது மிக முக்கியம். நாம் (பெற்றோர்) நினைத்தவாறு குழந்தைகள் நடந்து கொள்ள வேண்டும் என்பது முற்றிலும் இயல்பிற்கு முறனானது. பெற்றோர்கள் மிகுந்த பொறுமையுடனும், அன்புடனும் குழந்தைகளை கையாள்வதே அவர்களுடைய மன வளர்ச்சிக்கான வழி என்பதை புரிந்து கொண்டோம். நமது சூழ்நிலைக்கு ஏற்றவாரு அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பு வைக்காமல், குழந்தைகளின் உலகில் சென்று அவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும், அவர்களிடம் எதிர்பார்ப்புகளை வைக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவர்களை தயார்படுத்துதல் மிக முக்கியம் என்பதையும் எடுத்துக் கொண்டு ஒன்றுகூடலிலிரு...