விதைபந்துகளை கையில் எடுப்போம் ! விதைப்பந்து இன்று பரவலாக நாடு முழுவதும் அறியப்பட்டு மக்கள் அதை கையில் எடுப்பதற்கு மிக முக்கிய காரணம் தோழன் ஜனகன் @janakan. இதில்'அகத்தி' தோட்டத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் விதைப்பந்துகள் பற்றிய கேள்விகளும் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கும் சூழலில், எந்த புரிதலின் அடிப்படையில் விதைய்பந்துகளை கையில் எடுத்தோம் என்பதை இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம். விதைப்பந்து வளருமா வளராதா நம் நிலப்பரப்புக்கு அது தேவையா இல்லையா, பொருந்துமா பொருந்தாதா என்பதை அனுபவத்திலிருந்து அதன் சரி தவறுகளை புரிந்து பகிர்ந்து கொள்வது அவசியம். ஆனால் மரங்களை வளர்ப்பதில் விதைபந்துகளே தீர்வு என தட்டையாக புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்களும் கிராமங்களில் இதை வரட்டுத்தனமாக நடைமுறைப்படுத்துவதும் இன்றைய சூழலில் விதைபந்துகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் ஏன் விதைப்பந்துகளை தொடர்ச்சியாக கையில் எடுக்க வேண்டும் என்றால் ? மண்ணை தொடுவது கெட்ட பழக்கம் கிருமிகள் வரும், அது அழுக்கு என்று ஆழமாக நகரங்கள் என்னும் நரகங்களில் ...