Skip to main content

Posts

Showing posts from August, 2022
  காடா கல்லூரியா ? பொதுவாக ஒன்றை பற்றிக் கூற வேண்டுமானால் அதன் வரலாறுதான் முதல்பாகத்தை ஆக்கரமிக்கும் என்பது வழக்கு ; ஆனால் அதனை தவிர்த்து இன்றைய இயற்கை நடைவல அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். MCC கல்லூரி இந்தியாவில் இருக்கும் ஆங்கிலேய மிச்சங்களில் ஒன்று என்பதும் அதில் படிக்க சேர்வது கடினம் என்பதும் இன்றுதான் அறிந்துகொண்டேன். வாயில் காப்போர்களால் "என்ன வேண்டும் ? யார் நீங்கள்?" என்னும் கேள்வியுடன் உள்ளழைத்து; பயண முடிவில் நாம் நன்றி கூறியவுடன் சிரித்த முகத்துடன் வழியனுப்பி வைத்த-அக்கல்லூரியின் வயதையும், விரிந்த வனப்பையும் கண்டு கேட்டவுடன் பிரமிப்பு அடைந்தேன் ஆனால் மான் , மயில், வௌவால் ,கிரீபிள்ளை என ஏனைய விலங்கினங்கள் அங்கு சேர்ந்து படிக்கும்போது என்னால் அங்கு படிக்க முடியவில்லையே என்றெண்ணி பொறாமை கொண்டேன். கட்டிடங்களின் உறுதித்தன்மை அதன் வடிவமைப்பு என்னை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது மேலும் ஆங்காங்கே தனி தனியாக இருக்கும் வீடுகளில் அங்குள்ள ஆசிரியர்கள் வசிப்பதை கண்டவுடன் அவர்களின் துணிச்சல் தான் எனக்கு தெரிந்தது . அதிக நபர்களின் வருகை நம் நடைவலத்திற்கு உற்சாகத்த...
  சிறார்களம் வயல்ல தான் நெல்லு விளையுதுனு பாடப்புத்தகத்துல இருக்கும். நம்ம பள்ளிக் காலங்களில் அத நாலு சுவத்துக்குள்ள கரும்பலகையில தான் சொல்லி தருவாங்க.. ராக்கெட்டும் போர்டுல தான் வரையப்படும்,பறவையும் புத்தகத்தில் படமாகத்தான் காட்டுவாங்க.இதெல்லாம் தெரிஞ்சுக்குறது அறிவ வளர்த்துக்க இல்லை. வெறும் மதிப்பெண் வாங்க தான். மதிப்பெண் வாங்குரதுக்கான குதிரைகளாக பள்ளிக்கூடங்கள் நம் குழந்தைகளை உருவாக்கிக் கொண்டிருக்கு. இந்த மாதிரி சூழலில் சிறார்களுக்கான களமாக தாம்பரத்தில் வாரம் வாரம் குழந்தைகளுக்கான ஒன்றுகூடல் நடந்துகொண்டிருக்கு. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை தேனிக்கள் குறித்த அறிமுக நிகழ்வு நடைபெற்றது. பாட்டுடனும் உரையாடலும் மட்டுமல்லாமல் தேனீயை நேரடியாக பார்க்கும் வாய்ப்பும் குழந்தைங்களுக்கு கிடைத்தது. வெறும் படங்களும் பாடப்புத்தகங்களும் தேனீக்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதை விட நேரடியாக பார்க்கும் போது குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். அகத்தி : 9940220091
  சிறார் களம் இனி வரும் எல்லா வார இறுதிகளிலும் தாம்பரத்தில் குழுந்தைகளுக்கான ஒன்றுகூடுகை. கற்றலும் - கற்பித்தலும் - பகிர்தலும் - திரனறிதலும் கதைகளம் - விளையாட்டு - நாடகம் - மற்றும் பல 12/08/22 வெள்ளிகிழமை மாலை 4.30 மணிக்கு சுபிக்ஷா அடுக்ககம், 42, வியாசர் தெரு, கிழக்கு தாம்பரம், தாம்பரம், சென்னை, தமிழ்நாடு 600059 அகத்தி - 9940220091, 9790965827 கடந்த சனிகிழமை நடந்த சிறார்களின் ஒன்று கூடுகை Ø Filling Circle: We drew around 15 circles of around 800 mm diameter. Around 8 random circles were chosen from 15 and a cardboard box is placed on them. Kids are lined up a little away from circles. As soon as the whistle is blown kids have to run and take the cardboard box and keep them in the vacant circles (only 1 cardboard box for a circle) ,immediately they have to fill another vacant circle with another cardboard box. Kids should do this continuously for 1 minute. For every kid there will be one observer who will see how many circles they are able to fill with cardboard box. Kid who fills ...
  குழந்தைகள் உலகம் தொடர்பான பெரியவர்களுக்கான ஒன்று கூடல் வடிச்சகஞ்சிய கொட்டியதாலோ, விளையாட்டா பேசும் போது சின்ன தவறு செய்திட்டாலோ அடி பயங்கரமா வாங்கிய தலைமுறை போன தலைமுறை. படிப்போட விளையாட்டுல தான் பெரிய நாட்டம். ஆனாலும் பிடிக்காத சைன் டீட்டாவையும்,காஷ் டீட்டாவையும் கட்டிக்கொண்டு அழனும். மார்க் குறஞ்சா வீட்டுல திட்டுவாங்கனும் பள்ளியில திட்டுவாங்கனும். நமக்கு பிடிச்ச விஷயத்தை விட்டுட்டு பிடிக்காத விஷயத்து பின்னாடி ஓடனும். இந்த பிரச்சனையெல்லாம் நம்மலோட போகட்டும் நம்ம பிள்ளைகளுக்கு வேணாம்னு நினைக்கிற தாம்பரம் பகுதியை சார்ந்த பேரன்பு கொண்ட சில பெற்றோர்களின் ஒன்று கூடுகையே இந்த சந்திப்பும் உரையாடலும். கடந்த புதன்கிழமை (10/08/22) நடந்த சந்திப்பு குழந்தைகளுக்கான உலகத்தை உருவாக்கி தர கடந்தகால நம் அனுபவங்களில் இருந்து ஒரு ஆக்கபூர்வமான உரையாடலை ஏற்படுத்தியது. குழந்தைகளுக்கான சிறார்களம் இனி அனைத்து வாரங்களிலும் தாம்பரத்தில் தொடர்ந்து நடைபெறும். ஒரே இடத்தில் இல்லாமல் வெவ்வேறு இடங்களில் இனி நடைபெறும். குழந்தைகளோடு குழந்தையாக எல்லா பெற்றோரும் தயாராக இருங்க கற்றதை கற்று அவிழுதுவிட்டு மீண்ட...
  சூழலியல் பயணம் நேற்று செஞ்சி கோட்டை சென்று வந்ததையொட்டி பயணத்தில் பங்கெடுத்த வித்யாராணி அவர்களின் அனுபவ பகிர்வு தோழர்களுக்கு வணக்கம், நேற்யை செஞ்சி கோட்டை பயணம் மிகச் சிறப்பு வாய்ந்த பயணமாகவும் அனுபவமாகவும் இருந்தது. அனுபவத்தை சொல்லும் முன்பே பயணத்தின் வெற்றியை சொல்கிறேன். எனது மூத்த மகள் "அம்மா ராணி கோட்டையும் பார்த்து வந்திருக்கலாம்" என்று என்னிடம் வருத்தப்பட்டாள். அதுமட்டுமில்லாமல் மலையேற்றம் ரொம்ப பிடித்திருந்தது அம்மா என்று கூறி மிகவும் சந்தோஷப்பட்டாள். எனது இளைய மகள் பயணத்தின் முந்தைய நாள் இரவே "அம்மா என்னால் மலையெல்லாம் ஏற முடியாது நீதான் என்னைத் தூக்கிச்செல்ல " என்று சொல்லியிருந்தாள். ஆனால் பயணத்தின் போது அவளால் முடியவில்லை என்றாலும் பெரிதாக என்னை தொந்தரவு செய்யாமல் தனது தோழிகளுடனேயே கோட்டை வரை ஏறி விட்டால். என்மீது அவளுக்கு கோபம் தான் இப்படி ஒன்னுமே இல்லாத மலைக்கு என்னை கூட்டி வந்திருக்கியே என்று. இப்படி கோபப்பட்ட அவளே இரவு படுக்கும்போது என்னிடம் வந்து "வையவன் தோழர் அந்த கோட்டையின் வரலாறு சொன்னாரே அதை எனக்கு சொல்" எனக் கேட்டால். இதுவே இந்த பய...
  செஞ்சி கோட்டையின் கட்டுமான பிரமிப்புகளை விளக்கிய வையவன் தோழரின் இணையருடன் ஒரு உரையாடல்..... மதி தோழர் (நான்கு மாத தனித்தமிழுடன்) நான்கு மாத குழந்தை தனித்தமிழுடன் செஞ்சி கோட்டை மேல் ஏறிய தோழர், ஒரு போட்டோ எடுங்க அண்ணா. பின்னர் எப்போதாவது இவள் வளந்தவுடன் “நாலாவது மாதமே செஞ்சி கோட்டை மேலே ஏறிட்ட நீ என்று சொல்லலாமில்லே..” அவர்களோடு பேசி கொண்டிருந்தபோது அவர் மிக சுவாரசியமாக சொன்னவை- கல்யாணம் ஆன உடனே ஒரு பண்ணையில் என் கணவர் வேலைக்கு சேர்ந்துவிட்டார். என்னை யும் அங்கே அழைத்து சென்று விட்டார். அவர் ஆரோவிலில் வேலை செய்து இயற்கை விவசாயம், மரபு கட்டுமானம் போன்ற திறமைகளை வளர்த்து கொண்டவர். அந்த பண்ணையின் சொந்தக்காரர் என்னிடம் எதையாவது எப்போதும் சொல்லி கொண்டிருப்பார். பற்பசை உபயோகிக்க கூடாது பல்பொடி தான் உபயோகிக்க வேண்டும், குளிப்பதற்கு சோப்பு கூடாது, கற்றாழை தேய்த்து குளிக்க வேண்டும், பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்ப கூடாது என்று. அப்போதெல்லாம் எனக்கு அவ்வளவு விவரம் தெரியாது, எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆசை தான் எனக்கும் இருந்தது. புருஷன் ஒரு நல்ல வேலைக்கு போகணும், பிள்ளைகளை நல்லா ப...