Skip to main content

Posts

Showing posts from October, 2022
  இயற்கைக்கு நெருக்கமாக..... National public school, Gopalapuram Nature club யின் மாணவர்களை நேற்று தாம்பரம் சானடோரியதில் உள்ள பச்சை மலைக்கும், சிட்லபாக்கம் ஏரிக்கும் கூட்டி சென்று காட்டி அவர்களுடன் உரையாடியது நிறைவாக இருந்தது. "கொரோனா காரணமா நிறைய செய்யனும் நினைத்து செய்ய முடியல. சென்னைக்குள இயற்கைக்கு நெருக்கமான இடங்களுக்கு மாணவர்கள கூட்டிகிட்டு போகனும்னு நினைக்கறேன். எளிமையான மலை ஏற்றமும் இருந்தா நல்லா இருக்கும்...." என்று ஆசிரியர் ரிபா கேட்டுகொள்ள, அழகாக அமைந்தது இந்த பயணம். விதை பந்து, உள்ளுர் வரலாறின் முக்கியதுவம், சூழலியல் சிக்கல், நகரமயமாக்கல், நூகர்வு பண்பாட்டில் இருந்து வெளிவருவதின் அவசியம், நீர் நிலைகளை பாதுகாக்க மக்கள் இயக்கங்களின் பங்கு என்று சிறப்பாக அமைந்தது சந்திப்பு. - பாரதி கண்ணன்
  அகத் தீ - உரையாட ல் காந்தாரா கர்நாடகா மாநிலத்தில் வாழ்கின்ற ஒரு பழங்குடி சமூகத்தின் நிலத்திற்கான போராட்டமே இந்த படம். நிலத்தை பணமாக பார்க்கத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து விளிம்பு நிலை மக்கள் மீதான அடக்குமுறைகள் எப்படி பல பரிணாமங்களை எடுக்கிறது என்பதை விவரிக்கிறது 'காந்தாரா'. சுவாரஸ்யமான திரைக்கதை மூலம், வணிக ரீதியான திரைப்படங்களுக்கு உரிய எல்லா அம்சங்களும் இருந்தாலும் மிக முக்கியமாக நில உரிமை மீதான உரையாடலை ஆழமாக ஏற்படுத்துகிறது. நாட்டார் தெய்வ வழிபாடு, அரசு வேலை கிடைத்த அன்றே தன்னுடைய சொந்த மக்களை நிலத்திலிருந்து அப்புறப்படுத்த வரும் இளம் பெண், வேகமாக மாறிவரும் நவீன காலகட்டத்தில் மனிதனுக்கும் வனத்திற்கும் உள்ள உறவு, பழங்குடிகளின் வாழ்க்கையில் பன்றியின் முக்கியத்துவம், அரசு அதிகாரிகளின் அணுகுமுறைகள் என்று பல முக்கியமான அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. "சட்டத்தை மீறி காட்டுக்குள்ள இருக்க நீங்க இங்க இருந்து வெளியேறனும்" அப்படின்னு சொன்ன காட்டிலாக அதிகாரி கிட்ட "உங்க சட்டமும் அரசும் உருவாகுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னாடியே நாங்க இங்கதான் இருக்கோம், இங்க உ...
  தன்னலமற்ற செயல்பாட்டுக்கான ஒரு முன்னோடி தன்னலமற்ற தன்னார்வ செயலால் மட்டுமே தன்னகத்தே ஏராளமானவர்களை வென்றெடுத்தவர் எங்கள் தோழர் கணேஷ். "தோழர் நாம் முன்னெடுத்து செய்கின்ற வேலைகளில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் அது நம்முடையதாக மட்டும் இருக்காது. எங்கோ நம்மைப் போன்று செய்ய வேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல உள்ளத்தினுடைய வெற்றியாகவும் இருக்கும். நாம் செய்கின்ற வேலையில் தோல்வியோ அல்ல முன்னேற்றமோ இல்லாமல் இருந்தால் நாம் ஒரு தவறான உதாரணமாக நம்மைப் போன்று செய்ய முன் வருபவர்களுக்கு சொல்லிக் காட்டப்படும். அதுவே அவர்களுக்கு தடையாக ஆகிவிடும். ஆக அந்த பொறுப்புணர்ச்சியோடு நாம் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும் தோழா...." இதுவே நான் இயங்குவதற்கும் 'அகத்தி'யின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் பின்னால் உள்ள மந்திரச்சொல். குழந்தைகளுக்காகவும் பெரியோர்களுக்காகவும் அவர் காட்டும் அக்கறையும் கரிசனமும் அளவிட முடியாது. அப்படிதான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் ஏதோ ஒரு விதத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் ஒவ்வொரு தீப ஒளி திருநாளன்று தோழரின் முன்னெடு...
  அகத் தீ நிகழ்வு இன்று காலை நாளைய 'விதை பந்து செய்யலாம் வாங்க ' நிகழ்விற்கான ஒத்திகை Seed Bomb இருக்க Atom Bomb எதற்கு ? 23 அக்டோபர் 2022 காலை 6.30 மணிக்கு சிட்லபாக்கம் ஏரிகரை முன்பதிவு அவசியம் : 99402 20091 தாம்பரம் மக்கள் குழு / சிட்லபாக்கம் ரைசிங்
  விதைத்து கொண்டே இருப்போம்.... மக்களின் மனதில் ஆழமாக அன்பை, நம்பிக்கையை, மாற்றதிற்கான விதையை விதைப்போம் சிட்லபாக்கம் ஏரி கரையில் குடும்பமாக கூடினோம் தீபாவளி திருநாளை ஒட்டி விதைப்பந்து செய்ய... கொண்டாட்டங்களை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம் தாம்பரம் மக்கள் குழு சிட்லபாக்கம் ரைசிங் https://fb.watch/gDJv6I-fhh/ https://fb.watch/gDJv6I-fhh/ https://www.facebook.com/1480735292252385/posts/3359903797668849/ https://fb.watch/gDJDpJ16ke/ https://fb.watch/gDJG4iRRgg/ https://fb.watch/gDJGODGqaJ/ https://fb.watch/gDJHBMFXmO/ https://www.facebook.com/1480735292252385/posts/3359726531019909/
  பட்டாசுகளை தவிர்ப்போம் ! அகத் தீ - நிகழ்வு இயற்கையை பாதுகாப்போம் ! தீப ஒளி திருநாளாக கொண்டாடுவோம் ! இன்று காலை சிட்லபாக்கம் ஏரிக்கரையில் குழந்தைகளுடன் பட்டாசுகளால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி இயற்கையை பாதுகாக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தோம். இதை உள்வாங்கிய சிறார்கள் அவர்களே துண்டறிக்கையை மக்களிடம் விநியோகித்தார்கள். பட்டாசை வெடிப்பவர்களுக்கு மட்டுமே அது மகிழ்ச்சியை கொடுக்கும் மற்றவர்களுக்கு அதிர்ச்சியையும் இன்னல்களையும் கொடுக்கும். "மண்ணில் விளையாடும் போது எவ்வளவு பேருக்கு மகிழ்ச்சி ?" என்றேன் எல்லோரும் கை தூக்கினார்கள் அப்போ தீபாவளியை ஒட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை விதை பந்து செய்யலாமா என்றேன். செய்யலாமே என்று எல்லோரும் ஒருமித்த குரலோடு சொன்னார்கள். Seed bomb இருக்க Atom bomb எதற்கு ? வெடிக்கு விடை கொடுப்போம் வெடி சிரிப்புக்கு மட்டும் இடம் கொடுப்போம் வரும் ஞாயிறு 23/10/22 விதைபந்து செய்யும் நிகழ்வு. சிட்லபாக்கம் ஏரி கரை முன்பதிவு அவசியம் 9940220091
  அகத்தி சமூகத்தின் குடும்ப ஒன்று கூடல் தொடர்ச்சியாக அகத்தியின் நிகழ்வில் பங்கெடுத்த குடும்பங்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு அந்நியோனியமான நெருக்கத்தை மேலும் வலுப்பெறுவதற்கான ஒரு சந்திப்பாக இந்த ஒன்று குடல் அமைந்தது. கடந்த 8 அக்டோபர் 2022 சனிக்கிழமை மதிய உணவுடன் பாலமுரளி தோழர் வீட்டில் ஒன்று கூடலாம் என்று முடிவு செய்தோம். நான் முதலில் சொல்ல வேண்டியது பாலமுரளி தோழர் வீடு மிகவும் அழகாக இருந்தது. முதலில் அவர்களின் பட்டுபூச்சி மணி தோரணம் எங்களை வரவேற்றது. பிறகு உள்ளே சென்றால் அவர்கள் கையால் வரைந்த ஓவிய பிரேம், நியூஸ்பெபேர் கூடை , ஆங்காங்கே அவர்களின் குட்டி குட்டி குடும்ப புகைப்படம் எங்களை ஈர்த்தது. அடுத்த கட்டமாக நாங்க ஒரு வொய்ஸ்வர் மூலமாக "Survival Family" என்ற ஒரு ஜப்பானீஸ் படம் பார்த்தோம். அந்த படம் நாம் அன்றாட வாழ்வில் இருக்கும் வசதிகள் திடீர் என்று இல்லாவிட்டால் நாம் என்ன செய்வோம் என்பதை பற்றி..... மிகவும் யோசிக்கக்கூடியதாக இருந்தது. அடுது வேற என்ன சோறு தான். ஒரு நல்ல விருந்து போல இருந்துச்சு. எல்லாரும் நல்ல சமைச்சிருந்தாங்க..... ரொம்ப சுவையான சாப்பாடு. அடுத்த கட்டமாக ஒரு உரைய...
  உள்ளூர் வரலாறு எங்கோ இருக்கும் சீன சுவரையும், நைல் நதி பற்றி தெரிந்து கொள்ளும் நாம் நம் பகுதி, ஊரில் உள்ள வரலாற்று சிறப்புகளையும் முக்கியத்துவத்தையும் பற்றி தெரிந்து கொள்ள எந்த அளவிற்கு ஆர்வமும் முனைப்பும் காட்டியுள்ளோம் ? இந்தக் கேள்வியே தாம்பரம் பகுதி சார்ந்த வரலாறுகளை தெரிந்து கொள்ளவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சென்று பார்க்கவும் காரணமாக இருந்தது. ஆயிரம் ஆண்டுகால தாம்பரம் சுற்று வட்டார வரலாற்றை சென்று பார்த்து தெரிந்து கொண்ட பிறகு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பார்த்து ஆவணப்படுத்த வேண்டிய தேவை உள்ளதையும் உள்வாங்கியுள்ளோம். வேகமான நகரமயமாக்கள் சூழலில் இவைகள் வேகமாக காணாமல் சென்று கொண்டிருக்கிறது என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கிறோம். இதன் ஒரு பகுதியாக இந்த மாதம் ஒன்றாம் தேதி திரிசூலம் மலைக்கு சென்று வந்தோம். பயணம் தொடரும்....