Skip to main content

Posts

Showing posts from April, 2025

இயற்கைக்கு திரும்பும் பாதை

  இயற்கைக்கு திரும்பும் பாதை கடந்த ஆண்டு 2025 ஏப்ரல் மாதம் மாணவர்கள் இடையே இயற்கையை மையமாக வைத்த பயிற்சிகளை கொண்டு சேர்ப்பதின் ஒரு பகுதியாக மேற்கு தாம்பரம் சான் அகாடமி உடன் இணைந்து கோடை பயிற்சி வகுப்புகளில் அகத்தீ பங்கெடுத்தது. முற்றிலும் புதிய அனுபவமாக இருந்த இந்த பயிற்சி வகுப்பு, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடைய இயற்கை பற்றியான ஆர்வமும் வரவேற்பும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை விளக்கும் விதமாக இருந்தது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே இயற்கை பற்றிய விழிப்புணர்வும் ஆர்வமும் மிக குறைவாக உள்ளதையே இது காட்டியது. அதைத்தொடர்ந்து நமது தகையில் விதைப்பந்து செய்வதற்கான நிகழ்வு சிறப்பாக நடந்தது. இந்த இடைவெளியை சரி செய்யும் விதமாக பெருவாரியான பள்ளி மாணவர்கள் இடையே இயற்கை மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வுகளை கொண்டு போய் சேர்ப்பதற்கு பெரும் உழைப்பை கோருவதாக இருந்தது சமீபத்தில் அகத்தீ ஒருங்கிணைத்த தமிழும் இயற்கையும் நிகழ்வு.

அகத்தீ - வகுப்பறைகளை கடந்த ஒரு பயணம்

  அகத் தீ-- வகுப்பறைகளை கடந்த ஒரு பயணம் மாற்று கல்வியை நாடும் பெற்றோர்களுக்கான வழிகாட்டுதலாக அமைந்தது ஏப்ரல் 14, 2025 அன்று வழக்கறிஞர் முனாசர் உடனான கலந்துரையாடல் முனாசர் தனது எட்டாவது வகுப்புடன் பள்ளிக்கு செல்லுவதை நிறுத்திவிட்டு, அதன் பின்னர் ஓபன் ஸ்கூல் (0pen School) என்னும் NIOS வழியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளை வெற்றிகரமாக எழுதி தேர்வாகி உள்ளார். அதன் பின்னர் பி.காம் , LLB ஆகியவற்றையும் முடித்து தற்போது ஒரு வழக்கறிராகவும் பணிபுரிகிறார். வீட்டில் இருந்தபடியே பள்ளிப்படிப்பை பயின்ற காலகட்டத்தில் தனது குடும்பத் தொழிலிலும் ஈடுபட்டு, மாணவ பருவத்திலேயே நிறைய ஊர்களுக்கு தனியாக பயணித்து, பல அனுபவங்கள் மூலமாக வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான தெளிவையும் தன்னம்பிக்கையும் பெற்றிருக்கிறார் என்பது அவருடைய பேச்சில் தெளிவாக தெரிந்தது. முனாசருடனான கலந்துரையாடல் தற்கால கல்வி முறையில் பயின்று வரும் சிறார்களின் பெற்றோருக்கும், மாற்று கல்வி முறையை நாடும் பெற்றோருக்கும் உள்ள நடைமுறை இடைவெளியை புரிந்து கொள்ள ஒரு அனுபவ வழிகாட்டுதலாக இருந்தது. முனாசர் தன்முனைப்போடு பள்ளிப்படிப்பை முடித்து, இளம் வயதி...

அகத்தீ - சிறு உரையாடலும் பெறும் நம்பிக்கையும்

அகத் தீ -   சிறு உரையாடலும் பெறும் நம்பிக்கையும் 06/04/25 எளிய மக்களுக்கான எளிய முன்னெடுப்பு உதவிகள் தேவைப்படும் எளிய மக்களுக்கு நேர்மையாக செயல்படும்போது சாதாரண மனிதர்களும் கடவுளாக காட்சியளிப்பார்கள். வழக்கறிஞரும் மருத்துவரும் அப்படிப்பட்ட இரண்டு துறையை சார்ந்தவர்கள். தங்களுக்கான உதவி என்று வரும்போது அந்த வழிகாட்டலை பெற்று கிடைக்கும் தீர்வும், அடையும் மன நிறைவும் மனித உயிர்பை மேலும் மேலும் அர்த்தமாக்கி கொண்டு இருக்கிறது. வணிகமயமாக்கப்பட்ட அலோபதி மருத்துவத்தில் இருந்து விடுபட்டு மரபு மருத்துவம் மூலமாக தீர்வு காண விழைபவர்களுடன் வாழ்க்கை முறை மாற்றத்தின் துணை கொண்டு மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை படைக்க சிறு முயற்சி. -தகை, தாம்பரம்