சிவராத்திரி ஒன்று கூடல் கடந்த சனிக்கிழமை (18/2/2023) அன்று ரேஷ்மா தோழர் வீட்டில் நடந்த உரையாடல். நாம் எல்லோருக்கும் ஒரு விவசாய நிலம் ஆவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது அது ஒரு தனி மனிதராக வாங்குவதை விட ஒரு குழுவாக சேர்ந்து வாங்குவது நல்லது என்று நம் அனைவரின் எண்ணம். நாம் இதை வெறும் விவசாயத்துக்கு மட்டுமில்லாமல் அது ஒரு சோசியல் ,என்விரான்மென்டல், கல்ச்சுரல், பொலிடிகல்.. இந்த எல்லா விஷயத்தையும் அடக்கின ஒரு இடமாக இருக்கணும் என்று பேசியபோது அதுக்கும் எல்லாரும் சரி என்ற போல தான் சொன்னாங்க. அது மட்டும் இல்லை அதை சுத்தி நிறைய விஷயங்களை பார்க்க வேண்டியது இருக்கு அங்க இருக்கிற நீர் ஆதாரம் ,நீரோட்டம், மண் பருவம், கால்நடை அங்கு இருக்கிற மக்கள் இதெல்லாம் தெரிந்து கொள்வதற்காக நமக்கு குறைந்தது ஒரு வருஷமாவது ஆகும் .இது புரிஞ்சுகிட்டா தான் எதிர்காலத்தை தெளிவாக நம்மால் யோசிக்க முடியும் ஒரு குழுவாக செயல்பட முடியும் அங்கு என்ன செய்யப் போறோம் எப்படி வேலி கற்றது ,வீடு கட்டுவது என்ன வேலி கட்ட போறோம் என்ற எல்லாத்தையும் நம்ம ஒரு தெளிவோடு யோசிக்கணும்....