Skip to main content

Posts

Showing posts from July, 2023

பாரதியின் 'காணி நிலம் வேண்டும்'

  "காணி நிலம் வேண்டும்.... !" மகாகவி பாரதியாரின் கவிதையில் வரும் வரிகளின் அர்த்தங்களும், அந்த கனவும் இப்போதும் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. நம் ஒவ்வொருவரிடம் உள்ள அந்த தீரா கனவுக்கு ஒரு அழகான செயல் வடிவம் கொடுத்துள்ளார் நம் தாம்பரம் பகுதியை சார்ந்த முன்னாள் பள்ளிகூட தமிழ் ஆசிரியர் தோழர் வெஸ்லி. உத்திரமேரூர் வட்டம் வயலூர் கிராமத்தில் அமைந்துள்ள அவருடைய தோட்டத்திற்கு கடந்த திங்கட்கிழமை சென்று வந்தது மிகுந்த மன நிறைவை கொடுத்தது. ஏராளமான பழ மரங்கள், பன்னை குட்டை, தங்குவதற்கான குடில், காய்கறி செடிகள், புறா, நாட்டு கோழி, வான்கோழி, கின்னி கோழி போன்ற ஏராளமான பறவைகள் என்று ஒருங்கிணைந்த பன்னைக் கான முயற்சியில் உள்ளார், வாழ்த்துக்கள் தோழர். காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும், - அங்கு தூணில் அழகியதாய் - நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் - அந்தக் காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் - அங்கு கேணியருகினிலே - தென்னைமரம் கீற்று மிளநீரும். பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும், அங்கு கத்துங் குயிலோசை ...

அகத்தீ உரையாடல்

  அகத்தீ உரையாடல் மாலை நேரம், சிட்லபாக்கம் ஏரிக்கரை. 30/07/23 தமிழ் வழி பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்த பெற்றோரர்களின் அனுபவ பகிர்வு, வெள்ளை காரனை விட மிக மோசமாக சிறிய சேமிப்புகளையும் கொள்ளையடிக்கும் வருமானவரியின் விதிகள், மறைமுகமாக சேமிப்பு என்ற சிந்தனையே இல்லாமல் செலவு செய்ய கட்டாய படுத்தும் நுகர்வு வாழ்கை முறை, மணிப்பூர் மக்களின் துயரத்தில் பங்கு கொள்ளுதல், அமைதி நிலவ துணை புரிதல், நம் வேகமான வாழ்கை முறையின் காரணமாக வண்டியில் அடிபட்டு இறந்து போன நாயை காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி என்று உரையாடல் உருக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது.

அகத்தீ - மலை ஏற்றமும் பாட்டு பயிற்சியும் - பச்சை மலை

  மலை ஏற்றமும் பாட்டு பயிற்சியும் நேற்று காலை அகத்தி தோழர்களுடன் தாம்பரத்தில் உள்ள பச்சை மலைக்கு சென்று வந்தோம். _________ ஒவ்வொரு நொடியிலும் வாழ்வோம் ஒவ்வொரு பொழுதிலும் வாழ்வோம் உண்மையில் அழகினை காண்போம் உன்னதம் இது என சொல்வோம் (ஒவ்வொரு நொடியிலும்) காடும் மலையும் கடலும் வானும் எல்லாம் நமக்கு சொந்தம் கங்கை யமுனை காவிரி வைகை எல்லாம் நமக்கு பந்தம் (ஒவ்வொரு நொடியிலும்) ஒவ்வொரு ஒலியும் ஒவ்வொரு விதமாய் காதில் விழுவது இனிமை ஒவ்வொரு ஒளியும் ஒவ்வொரு விதமாய் உயர்வது ஒருவித பெருமை (ஒவ்வொரு நொடியிலும்) பெண்ணின் மகிமை பேசும் போது மண்ணும் சிலிர்த்து நிமிரும் தடைகள் உடைந்து நொறுங்கி விழுந்து மானுட ஆளுமை வெல்லும் (ஒவ்வொரு நொடியிலும்) மாற்றம் இல்லா வாழ்க்கை ஓர் நாள் தேங்கிய நீராய் நாறும் மாறி மாறி மலரும் வாழ்க்கை மல்லிகை பூவாய் மனக்கும் (ஒவ்வொரு நொடியிலும்) ஆடலும் பாடலும் ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் தேடிய செல்வம் ஆடியும் பாடியும் அன்பை வளர்ப்போம் அது தான் நமக்கு தெய்வம் (ஒவ்வொரு நொடியிலும்) அகத்தியக்ஷ நிகழ்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இணையலாம் https://chat.whatsapp.com/Kxp...