மாணவர்களை சென்றடைவோம் ..... கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக அகத்தீ தாம்பரத்தை கடந்து தனது பணிகளை விரிவாக்கும் விதமாக பறந்து பட்ட மாணவர்களை சென்றடைய ஒரு முயற்சியாக கடந்த மாதம் ஜனவரி 30,31 தேதிகளில் வி ஐ டி சென்னை வளாகத்தில் நடந்த சர்வதேச ரோபோடிக்கா நிகழ்ச்சியில் பங்கெடுத்தோம். முற்றிலும் புதிய அனுபவமாக இருந்த இந்த நிகழ்வில் அகத்தீயுனுடைய கடந்த கால செயல்பாடுகளை புகைப்படங்களாக வைத்து காட்சிப்படுத்தினோம். அதேபோல் சென்னை காலநிலை செயல்பாட்டு குழுவுடன் Chennai Climate Action Group இணைந்து கழிவில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தில் ஏற்படும் விளைவுகளை விளக்கும்விதமாக புகைப்பட கண்காட்சிகளையும் வைத்தோம். மாணவர்களுக்கு இலவசமாக விதைப்பந்து வழங்கினோம். பூக்களைத் Perumal Theerthavadivel தேடி தேனீக்கள் மொய்ப்பதை போல மாணவர்களை வெகுவாக ஈர்த்த ஒன்றாக பண்டைய ஒலைச்சுவடிகளை போல, பனை ஓலையில் அவர்களின் விருப்பப்பட்ட பெயர்களை லேசர் தொழில்நுட்பம் கொண்டு அச்சிட்டும், எழுத்தாணி மூலமாக எழுதியும் கொடுத்தோம். எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு இருந்தது. இதை ஒரு வாய்ப்பாக எடுத்து பனை மரத்திற்கும் தமிழ்...