Skip to main content

Posts

Showing posts from November, 2025

சிறார்களுக்கான சூழலியல் விழிப்புணர்வு நிகழ்வு

  அகத் தீ - சூழலியல் விழி ப் புணர்வு நம் கூட்டு எதிர்காலத்திற்கான சிறார்கள் கடந்த ஆண்டு மிகவும் சிறப்பாக முன்னெடுத்து நடத்தியதின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் சூழலியல் சார்ந்த ஆழமான புரிதலை நேரடி கள ஆய்வு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் அறிந்து கொள்வதற்கான முயற்சியை சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழுவுடன், அகத்தீ ஏற்பாடு செய்துள்ளது. * திட்டமிடாத நகரமயமாக்கல் * நீர் வழி பாதையை கண்டறிதல் * வெள்ள பாதிப்பை மதிப்பிடுவது * இதற்கு பொறுப்பான அரசுத்துறையை கண்டறிவது 11 வயதிற்கு மேற்பட்ட சிறார்கள் தங்கள் பெற்றோர்களுடன் இந்த கற்றல் பயணத்தில் இணைந்து கொள்ளலாம். பதிவு செய்பவர்களுக்கு நாள், நேரம் மொத்தம் எத்தனை வகுப்பு, கட்டண விவரங்கள் போன்ற பிற தகவல்கள் பகிரப்படும். டிசம்பர் ஞாயிறுகளில் நடைபெறும். மேலும் தகவல்களுக்கு & பதிவு செய்ய : பாரதி : 94984 88645 சிவகாமி : 73976 73819 கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இணையதள வகுப்பின் சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

ஓவிய கண்காட்சி - தகை

அகத் தீ - ஓவிய கண்காட்சி தகை சமூக கூடத்தில் ஓவியர் சிவனேசகுமரன் அவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தியது முற்றிலும் வேறுபட்ட புதிய அனுபவமாக இருந்தது. கருப்பு வெள்ளையை மட்டும் பிரதானமாக வைத்து வரைந்த ஓவியங்கள் கண்களுக்கு புதிய விருந்தாக இருந்தது. " ஓவியங்கள் என்னும் போது வண்ணங்களோடு மட்டுமே தொடர்பு படுத்தி பார்த்த எங்களுக்கு இது முற்றிலும் வேறுபட்ட அனுபவம்" என்றார் இளம் ஓவியர் செந்தமிழ். Optical Art என்று சொல்லப்படக்கூடிய சில ஓவியங்களும், பல ஆண்டுகளாக வரைந்தவையும், நிறம், ஆற்றாமை என்று மனித மனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய சில ஓவியங்களும், புகைப்படங்களும் காட்சிப்படுத்திய இடத்தை அடர்த்தி ஆக்கியது. புதிர்களுடன் கூடிய ஓவியங்கள் வந்திருந்த அனைத்து வயதினருக்கும் ஒரு விளையாட்டாகவும் அமைந்தது ஆச்சரியம். முற்றிலும் புதிய பார்வையை, ரசனையை, உரையாடலை பன்முகத்தன்மையை கலைகள் மூலமாக அடுத்த தலைமுறைக்கு கடத்துவது ஒவ்வொரு கலைஞனின் கடமையாகும். அதை செப்பனே செய்து கொண்டிருக்கும் ஓவியர் சிவனேசகுமரனுக்கும் உடன் நின்ற அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள். கலையையும் கலைஞர்களையும் கொண்டாடுவோம...

ஒலி ஆற்றுப்படுத்துதல்

  அகத் தீ - ஒளி ஆற்றுப்படுத்துதல் Sound Healing 09/11/2025

தமிழும் இயற்கையும் போட்டிக்கான விவரங்கள்

'தமிழும் இயற்கையும்' - 2025-26 பள்ளி மாணவர்களுக்கான திறனறிதல் போட்டி * போட்டியில் பங்கெடுக்கக்கூடிய மாணவர்கள், இதையொட்டி அவர்களை வழி நடத்துகின்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்  நிகழ்வு பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணையவும். https://chat.whatsapp.com/KdksCAqt5TJ9PMMAS8hABk     * போட்டிகளில் பங்கு எடுக்க இங்கு பதிவு செய்யவும் :-    https://forms.gle/61vgXjXJaNaskmtL6   * படைப்புகளை சமர்ப்பிக்க படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யவும். கீழே உள்ள இணைப்பில் உள் செல்லவும் :- https://forms.gle/LWXuYG4fRRX1cG1H8    தொடர்பு கொள்ள -  https://wa.me/919498488645 அறிமுகம் : தமிழின் இனிமையையும், இயற்கையின் முக்கியத்துவத்தையும் இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் ஒரு மாபெரும் முயற்சி இது. மாணவர்களின் பன்முகத் திறன்களை வெளிக்கொணரும் களமாகவும், சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த 'தமிழும் இயற்கையும்' திறனறிதல் போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.   பங்கேற்பாளர் பிரிவுகள்:   •...

சூழலியல் கள ஆய்வு - அறிவியல் பூர்வமான அனுகுமுறை

  அகத் தீ -- சூழலியல் கள ஆய்வு வெள்ள பாதிப்பை புரிந்து கொள்ள அறிவியல் பூர்வமான அனுகுமுறை சிட்லபாக்கம் ஏரியை சுற்றியுள்ள வடிகால் கால்வாய்கள் பலவற்றை மூடியதாலும் நீர்வழிப் பாதை மற்றும் புறம்போக்கு நிலங்களை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்ததாலும் ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் மிகுந்த வெள்ள அபாயத்தை சந்தித்து வருகின்றன. இதனை ஒட்டி தாம்பரம் மக்கள் குழு நடத்தி வரும் சட்டம் மற்றும் அறிவியல் வழியான நடவடிக்கைகளில் வியாசை தோழர்கள், (Youth Climate Resilience Movement) மற்றும் சென்னை காலநிலை செயல்பாட்டு குழு இணைந்து முதல் கட்ட கலந்தாய்வு நடத்தியுள்ளோம். இதை ஒட்டி தமிழ்நாட்டின் மிக முக்கியமான நீர்நிலை பாதுகாப்பு இயக்கமான சிட்லபாக்கம் ரைசிங் குழு தோழர்களையும் சந்தித்து கலந்துரையாடினோம். ( 02/11/2025) வியாசை பகுதியில் நடத்தி வரும் QGIS ஆய்வு முறைகளை வியாசையின் இளைஞர்கள் அகத்தி சிறார்களுக்கு கற்றுக் கொடுத்து இணைந்து பயணிக்கும் ஒரு அரிய வாய்ப்பு அமைந்துள்ளது. இது அனைவரின் எதிர்காலத்திற்கான முயற்சியாகும். தகையில் நடந்த பள்ளி மாணவி ஆராவின் பிறந்தநாள் அன்று இதைப்பற்றி சிறுவர்கள் மத்தியில் சி...