அகத்தி தோட்டத்தில் கடந்த ஆறு மாதமாக சிறு முயற்சியாக மர கன்றுகளை பதியம் போட்டும் சில நண்பர்கள் கொடுத்ததையும் சேர்த்து பராமரித்து வந்தோம். மா, பாதம், வேம்பு, அசோக மரம் என்று 60க்கும் மேற்பட்ட நாற்றுகள் இருந்தது. சிட்லபாக்கம் ஏரி புனரமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில் மரக்கன்றுகளை நட தொடங்கியுள்ளனர். அதற்கு அகத்தியிலிருந்து சிறு பங்களிப்பு.