இந்த ஆண்டு (2019) ஏற்பட்ட மிகப்பெரும் வறட்சியும் அதனைத் தொடர்ந்து மழையும் அகத்தியில் எந்த ஒரு முறையான திட்டமிடளுக்குள் செல்லமுடியாமல் இருந்தது. இந்த சூழலில் சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் முடித்த தோழன் அருளின் தொடர் முயற்சியால் கடந்த ஒரு மாதமாக அகத்தியில் முளைத்துள்ள தாவரங்களை அடையாளப்படுத்தி முறையாக ஆவணப்படுத்தியும் சிறிய அளவு காய்கறி தோட்டத்திற்கான முதற்கட்ட பணியாக களை எடுத்து, கையால் உழுது, கீரைகளை விதைத்தும் உள்ளோம்.
வரும் நாட்களில் கையை கரையாக்கவும் மனதை இதமாக்கவும் விரும்புவர்கள் அகத்தியோடு இணையலாம் !
Comments
Post a Comment